தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவோ, தெலுங்கு சினிமாவோ எல்லா இந்திய சினிமாவும் சென்டிமென்ட்டுக்குள் சிக்கியவைதான். எந்தக் கூட்டணி வெற்றியாக இருக்கிறதோ அதை விடாமல் தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். பெயர் வைப்பதில் கூட நியூமராலஜி பார்த்து வைப்பார்கள். பட பூஜை, இசை வெளியீடு, பத்திரிகையாளர் சந்திப்பு, டீசர், டிரைலர் வெளியீடு எல்லாமே நல்ல நாள், நேரம் பார்த்து மட்டுமே நடக்கும்.
தமிழ் சினிமாவில் பல திறமையான நடிகைகள் வந்தாலும் அவர்கள் நடித்த படங்கள் ஓடவில்லை என்று சொல்லி அவர்களை ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி ஓரம் கட்டி விடுவார்கள். இதற்கு பலரை உதாரணமாகச் சொல்லலாம். சமீபத்தில் அப்படி ஒரு ராசியைப் பெற்ற நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் நடித்த 'என்னமோ ஏதோ, புத்தகம், ஸ்பைடர்' ஆகிய படங்கள் எதுவுமே ஓடவில்லை. ஆனால் தெலுங்கில் அவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
ரகுல் ப்ரீத் அடுத்து நாயகியாக நடித்துள்ள 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்திலாவது அவருடைய ராசியை மீறி ரகுல் ப்ரீதி சிங் வெற்றி பெறுவாரா எனப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு அடுத்த விஜய் படத்தில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால் ஏ.ஆர்.முருகதாஸ், 'ஸ்பைடர்' பட ராசியை மனதில் வைத்துக் கொண்டு அவரை ஒப்பந்தம் செய்யாமலே போய்விடுவார்.