டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் ரசிகர்களுக்கு பானுமதியை தெரிந்த அளவிற்கு மாதுரி தேவியை தெரியாது. காரணம் 39 படங்களில் நடித்த மாதுரி தேவி சொந்தப் படம் எடுத்து நஷ்டமாகி குறுகிய காலத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கியவர். ஆனாலும் அவர் படைத்த சாதனைகள் அதிகம்.
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு அவர் வட சென்னையில் கிறிஸ்தவ நாடகங்களில் நடித்து வந்தார். ஒரே நாடகத்தில் 3 வேடங்களில் நடிப்பார். ஆரம்பத்தில் வந்த சினிமா வாய்ப்புகளை தவிர்த்த மாதுரி தேவி, பின்னர் ஒப்புக் கொண்டார். கிளாரா மேரி என்ற தனது பெயரை மாதுரி தேவி என்றும் மாற்றிக் கொண்டார்.
1939ல் வெளிவந்த பாண்டுரங்கன் படத்தில் இரண்டாவது நாயகியாக அறிமுகமானார். இரண்டாவது படமான லட்சுமி விஜயம் என்ற படத்தில் அமுதா, குமுதா என இரட்டை வேடத்தில் நடித்தார். கன்னியின் காதலி என்ற படத்தில் கலைமணி, சந்திரிகா, ஆதித்தன் என மூன்று வேடங்களில் நடித்தார். இதில் ஆதித்தன் ஆண் வேடம். 1950ல் வெளிவந்த பொன்முடி படத்தில் ஹீரோ பி.வி.நரசிம்ம பாரதியை கட்டிப்பிடித்து நடித்து புரட்சியை ஏற்படுத்தினார். ஹீரோயின் என்று இல்லாமல் குணசித்திர வேடம், காமெடி, வில்லி, ஒரு பாட்டுக்கு ஆடுதல்என பல தளங்களிலும் மாதுரி தேவி தனது திறமையை காட்டினார்.