இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ் ரசிகர்களுக்கு பானுமதியை தெரிந்த அளவிற்கு மாதுரி தேவியை தெரியாது. காரணம் 39 படங்களில் நடித்த மாதுரி தேவி சொந்தப் படம் எடுத்து நஷ்டமாகி குறுகிய காலத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கியவர். ஆனாலும் அவர் படைத்த சாதனைகள் அதிகம்.
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு அவர் வட சென்னையில் கிறிஸ்தவ நாடகங்களில் நடித்து வந்தார். ஒரே நாடகத்தில் 3 வேடங்களில் நடிப்பார். ஆரம்பத்தில் வந்த சினிமா வாய்ப்புகளை தவிர்த்த மாதுரி தேவி, பின்னர் ஒப்புக் கொண்டார். கிளாரா மேரி என்ற தனது பெயரை மாதுரி தேவி என்றும் மாற்றிக் கொண்டார்.
1939ல் வெளிவந்த பாண்டுரங்கன் படத்தில் இரண்டாவது நாயகியாக அறிமுகமானார். இரண்டாவது படமான லட்சுமி விஜயம் என்ற படத்தில் அமுதா, குமுதா என இரட்டை வேடத்தில் நடித்தார். கன்னியின் காதலி என்ற படத்தில் கலைமணி, சந்திரிகா, ஆதித்தன் என மூன்று வேடங்களில் நடித்தார். இதில் ஆதித்தன் ஆண் வேடம். 1950ல் வெளிவந்த பொன்முடி படத்தில் ஹீரோ பி.வி.நரசிம்ம பாரதியை கட்டிப்பிடித்து நடித்து புரட்சியை ஏற்படுத்தினார். ஹீரோயின் என்று இல்லாமல் குணசித்திர வேடம், காமெடி, வில்லி, ஒரு பாட்டுக்கு ஆடுதல்என பல தளங்களிலும் மாதுரி தேவி தனது திறமையை காட்டினார்.