‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழ்த் திரையுலகத்தில் ஒரு படத்தை ஓட வைப்பதற்கு அந்தப் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் என்னென்னமோ செய்வார்கள். அவர்களது படங்களுக்கு போட்டி ரசிகர்கள் மூலம் எவ்வளவோ தேவையற்ற எதிர்ப்புகள் வரும். அதையெல்லாம் மீறித்தான் இப்போது படங்களை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு படத்தை பிரமோஷன் செய்வதற்கு இசை வெளியீடு, டிரைலர் வெளியீடு, பத்திரிகையாளர் சந்திப்பு என பல நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த படங்களின் நாயகியர் வருவதே கிடையாது. இதை பல ஆண்டுகளாகவே மேடைகளில் யாராவது ஒருவர் முழங்கிக் கொண்டேயிருப்பார்கள். இருந்தாலும் நாயகிகளை நிகழ்ச்சிகளுக்கு வரவைக்கும் நடவடிக்கைகளில் யாரும் இறங்கியதே கிடையாது.
நயன்தாரா முதல் முறையாக 'அறம்' படத்திற்காக தியேட்டர்களுக்குச் சென்றது இப்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அவர் இதற்கு முன் நடித்த படங்களுக்கு பிரமோஷனுக்காக எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் சென்றது கிடையாது. அவரை படத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் போடும் போது அதை ஒரு 'கண்டிஷன்' ஆகவே குறிப்பிட்டிருப்பார் என்பார்கள். ஆனால், 'அறம்' படத்தை அவர் ஓட வைப்பதற்காக தியேட்டர்கள் வரை போனதுதான், அந்தப் படத்தைப் பற்றி இப்போது அதிகம் பேச வைத்துள்ளது. அதனால், நேற்று பல தியேட்டர்களில் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியிருக்கிறது.
இதுநாள் வரை நயன்தாரா வராதது கூடப் பரவாயில்லை, அடுத்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களையும் 'அறம்' படம் போன்றே பிரமோஷன் செய்ய வருவாரா என கேள்வி எழுப்புகிறார்கள். நயன்தாராவின் 'அறம்' அடுத்த படங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது...?.