இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
2005-ம் ஆண்டு வெளியான படம் நோ என்ட்ரி. இதன் இரண்டாம் பாகம் நோ என்ட்ரி மெயின் என்ட்ரி என்ற பெயரில் உருவாக உள்ளது. இதில் சல்மான் கான் நடிக்க இருப்பதாக நீண்டகாலமாகவே செய்திகள் வந்தன. இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சல்மானுக்கு பதிலாக அக்ஷ்ய் குமாரை இந்தப்படத்தில் நடிக்க எண்ணியுள்ளனர். சல்மான் தொடர்ந்து மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் அவரால் இந்தப்படத்தில் நடிக்க முடியவில்லையாம். இதனால் அவரை விடுத்து அக்ஷ்யை நடிக்க வைக்க படக்குழு முயற்சி, அவரிடம் பேசி வருகிறது. அக்ஷ்ய் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிகிறது. நோ என்ட்ரி மெயின் என்ட்ரி படத்தை அனீஸ் பாஸ்மி இயக்க, போனி கபூர் தயாரிக்க உள்ளார்.