ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உலகெங்கும் உள்ள பல கோடி மக்களை தன் இனிய குரலால் ஈர்த்துள்ள இந்திய சினிமாவின் பொக்கிஷம் பி.சுசீலா. இவர் இன்று(நவ., 13) தனது 83வது பிறந்தநாளை கொண்டாடினார்.
ஆந்திரமாநிலம் விஜயநகரம் அருகில் உள்ள புலம்பாக்கத்தில் 1935ம் ஆண்டு நவம்பர் 13ந் தேதி பிறந்தவர். ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாராம் வெங்கடசாமி நாயுடுவிடம் இசை கற்றார்.
ஆரம்பத்தில் வானொலியில் பாடகியாக இருந்தவர், 1953ம் ஆண்டு பெற்றதாயில் "எதற்கு அழைத்தாய்..." என்ற பாடலை ஏ.எம்.ராஜாவுடன் பாடி தனது பாட்டு பயணத்தை தொடங்கினார். அப்போது துவங்கிய சுசீலாவின் இசை பயணம், 12 மொழிகளில் 40,000-க்கும் அதிகமான பாடல்களை பாட வைத்து சாதனை படைக்க வைத்தது.
ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, ஏ.எம்.ராஜா, சங்கர் கணேஷ், இளையராஜா உட்பட இந்தியாவின் அனைத்து புகழ் பெற்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி உள்ளார்.
உயர்ந்த மனிதன் படத்தில் இடம்பெற்ற "நாளை இந்த வேளை பார்த்து போய் வா நிலா..."வும், சவாலே சமாளியில் இவர் பாடிய "சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு..."வும் தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. இதுதவிர மூன்று தெலுங்கு பாடல்களுக்கும் தேசிய விருதை வாங்கினார். 11 மாநில அரசு விருகளும் சுசீலாவின் கரத்தை அழகுபடுத்தியது. பல தனி அமைப்புகள் சுசீலாவிற்கு கணக்கில்லாத விருதுகளை வழங்கி தங்களை பெருமைப்படுத்திக் கொண்டன.
சுசீலா அவர்கள் பாடிய சில பாடல்கள் இதோ...
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்...
யாருக்கு மாப்பிள்ளை யாரோ...
முத்தான முத்தல்லவோ...
அமுதை பொழியும் நிலவே...
பருவம் எனது பாடல்...
நெஞ்சத்திலே நீ....
லவ் பேர்ட்ஸ்...லவ்பேர்ட்ஸ்..
அத்தான் என் அத்தான்...
ஆடாமல் ஆடுகிறேன்...
நினைக்கத் தெரிந்த மனமே...
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல..
மாலை பொழுதின் மயக்கத்திலே...
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு...
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்...
இப்படி எத்தனை எத்தனை கானங்களை காற்று சுமந்து திரிகிறது. பூமியில் காற்று உள்ளவரை இந்த கானங்கள் மனிதர்களின் காதுவழி புகுந்து இதயத்தை நனைக்கும்.
நீங்களும் உங்களுக்கு பிடித்த பி.சுசீலாவின் பாடல்களை (கமெண்டில்) குறிப்பிட்டு இசைக்குயிலை வாழ்த்துங்களேன்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசீலா!!