சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
நடிகர் சிம்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கிண்டல் செய்து ஒரு பாடலை பாடி வெளியிட்டிருந்தார். இது ஆளும் பாரதிய ஜனதா கட்சியினருக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. சிம்பு வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதனால் சிம்பு வீட்டு முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பாடலுக்கு வந்த எதிர்ப்பு குறித்து விளக்கம் அளித்த சிம்பு. "ஒரு விஷயம் என்று வந்தால் அதில் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இந்த பாடலை பாடவில்லை. எனக்கு உண்மை என்று தோன்றியதை துணிந்து சொல்ல நான் பயப்பட மாட்டேன்" என்று கூறியிருந்தார்.
ஆனால் தற்போது "பாடல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்" என்று கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: பணமதிப்பிழப்பு பாடலை நான் எழுதவில்லை. எனது படத்திலும் இடம்பெறவில்லை. வேறு ஒரு படத்தில் இந்த பாடல் வருகிறது. பாடலை பாட ஒப்புக்கொண்ட பிறகுதான் அதில் என்ன வரிகள் இருந்தன என்பது எனக்கு தெரிந்தது. நான் ஒரு பாடகர். பாடுவது எனது தொழில். இதற்காக பிரச்னை வரலாம் என்று கருதி எனது வீட்டின் முன் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
பணமதிப்பிழப்பை கொண்டு வந்தபோது மக்களுக்கு பழைய பணத்தை மாற்றுவது, ஏ.டி.எம் மையங்களில் நிற்பது என்பது போன்ற சில கஷ்டங்கள் இருந்தன. சிலருக்கு நன்மையாகவும், சிலருக்கு தீமையாகவும் அமைந்து விட்டன. இதை கருத்தில் கொண்டே இயக்குனர் அந்த பாடலை உருவாக்கி உள்ளார். பாடலில் சர்ச்சை எதுவும் இல்லை. இதுவரை யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவும் இல்லை. யாருடைய மனதாவது புண்பட்டு இருந்தால் வருந்துகிறேன். அடுத்தவர்களை புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை.
இவ்வாறு சிம்பு கூறியிருக்கிறார்.