ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் சிம்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கிண்டல் செய்து ஒரு பாடலை பாடி வெளியிட்டிருந்தார். இது ஆளும் பாரதிய ஜனதா கட்சியினருக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது. சிம்பு வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதனால் சிம்பு வீட்டு முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பாடலுக்கு வந்த எதிர்ப்பு குறித்து விளக்கம் அளித்த சிம்பு. "ஒரு விஷயம் என்று வந்தால் அதில் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இந்த பாடலை பாடவில்லை. எனக்கு உண்மை என்று தோன்றியதை துணிந்து சொல்ல நான் பயப்பட மாட்டேன்" என்று கூறியிருந்தார்.
ஆனால் தற்போது "பாடல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன்" என்று கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: பணமதிப்பிழப்பு பாடலை நான் எழுதவில்லை. எனது படத்திலும் இடம்பெறவில்லை. வேறு ஒரு படத்தில் இந்த பாடல் வருகிறது. பாடலை பாட ஒப்புக்கொண்ட பிறகுதான் அதில் என்ன வரிகள் இருந்தன என்பது எனக்கு தெரிந்தது. நான் ஒரு பாடகர். பாடுவது எனது தொழில். இதற்காக பிரச்னை வரலாம் என்று கருதி எனது வீட்டின் முன் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
பணமதிப்பிழப்பை கொண்டு வந்தபோது மக்களுக்கு பழைய பணத்தை மாற்றுவது, ஏ.டி.எம் மையங்களில் நிற்பது என்பது போன்ற சில கஷ்டங்கள் இருந்தன. சிலருக்கு நன்மையாகவும், சிலருக்கு தீமையாகவும் அமைந்து விட்டன. இதை கருத்தில் கொண்டே இயக்குனர் அந்த பாடலை உருவாக்கி உள்ளார். பாடலில் சர்ச்சை எதுவும் இல்லை. இதுவரை யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவும் இல்லை. யாருடைய மனதாவது புண்பட்டு இருந்தால் வருந்துகிறேன். அடுத்தவர்களை புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை.
இவ்வாறு சிம்பு கூறியிருக்கிறார்.