டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் பிரகாஷ் ராஜ் சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பண மதிப்பிழப்பு விவகாரத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாக்கப்பட்டது. இது தொடர்பாக பிரகாஷ்ராஜிற்கு கடும் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன. இது தொடர்பாக அவர் மீது வழக்குகளும் தொடரப்பட்டன.
இந்நிலையில் பெங்களூருவில் இன்று (நவ.,12) பிரகாஷ் ராஜிடம் நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், திரைப்பட நடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்கு பேரழிவு. நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை. நான் எந்த அரசியல் கட்சியிலும் சேரப் போவதில்லை. ரசிகர்களின் விருப்பங்களை மனதில் கொண்டு நடிகர்கள் பொறுப்புக்களை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.
ரஜினி, கமல் ஆகியோர் விரைவில் அரசியல் கட்சி துவக்கப் போவதாக தகவல்கள் பரவி வருகிறது. இதன் முன்னோட்டமாக கமல், பா.ஜ., அல்லாத மாநில முதல்வர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து பிரகாஷ்ராஜ் கூறி உள்ள கருத்து, புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.