ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ், பாறையில் நடந்து வந்தபோது வழுக்கி விழுந்து விட்டதாக செய்தியும், சில போட்டோக்கள் வெளியாகின. அதோடு அவரது காலில் பலத்த அடி பட்டதால் அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. ஆனால், அந்த போட்டோவில் இருப்பது கீர்த்தி சுரேஷ் இல்லை நடிகை லிண்டா என்று இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது குஞ்சிரமண்டே குப்பயம் -என்ற மலையாள படத்தில் நடித்த போது அப்பட நாயகியான லிண்டாகுமார் என்பவர்தான் பாறையில் வழுக்கி விழுந்து விட்டாராம். அப்போது அவர் தொடரி படத்தில் கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்தது போன்ற காஸ்டியூமில் இருந்ததால் அவரை கீர்த்தி சுரேஷ் என்று நினைத்து செய்திகள் வெளியாகி விட்டதாக அப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.