விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. அண்மையில் சென்னையில் பெய்த தொடர் மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாகின. 2015 ஆண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அளவுக்கு இல்லாவிட்டாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை இரண்டு நாட்கள் பாதிக்கப்பட்டது.
மழை தீவிரமாக பெய்த போதும் சில தன்னார்வலர்கள் களத்தில் இறங்கி பணி செய்தனர். குறிப்பாக தமிழக காவல்துறை களத்தில் இறங்கி வேலை பார்த்தது. இந்த செயலை நடிகர் கமல்ஹாசன் தன் டுவிட்டரில் பாராட்டியிருந்தார். இப்போது விஷாலும் தன் பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு தமிழக காவல் துறையை பாராட்டியிருக்கிறார். இதுகுறித்து விஷால் கூறியிருப்பதாவது...
கனமழையின்போது களத்தில் பணியாற்றிய காவல்துறையினரை பாராட்டியே தீர வேண்டும். மழையால் தேங்கிய தண்ணீர் பல பகுதிகளிலும் வடிந்துவிட்டது. ஆனால், மழைநீர் சூழ்ந்துகிடந்த அந்த நாட்களில் காவல்துறையினர் களத்தில் ஆற்றிய பணி மற்ற அரசு துறைகளுக்கு முன்மாதிரியாக இருந்தது. 24 மணி நேரம் அயராது உழைத்தனர்.
சென்னை போக்குவரத்து போலீஸாரின் பங்களிப்பை பாராட்டாமல் போனால் நான் கடமை தவறியவனாகிவிடுவேம். தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் நல்ல பெய்ய வேண்டும் என நான் விரும்புகிறென். அதே நேரத்தில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் சென்னை மழை போன்ற நிலை ஏற்பட்டால் சென்னை போலீஸாரைப் போல் மற்ற மாவட்ட போலீஸாரும் உற்சாகத்துடனும் கண்காணிப்புடனும் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அரசு துறைகளுடன் இணைந்து செயல்பட்ட தன்னார்வலர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"நம்ம போலீஸ், நம்பகமான போலீஸ்"
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.