இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பல பிரச்சனைகளை எதிர் கொண்டு, வருமா வராதா என்ற சர்ச்சையில் சிக்கி ஒரு வழியாக அக்டோபர் 18ம் தேதி தீபாவளியன்று மிகப் பிரம்மாண்டமாக வெளியானது 'மெர்சல்' திரைப்படம். படம் வெளிவந்த பின்னும் டிமானிடைசேஷன், ஜிஎஸ்டி வரி ஆகிய வசனங்களால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுவே அந்தப் படத்தை 25 நாள் வரை ஓட வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. 25 நாளில் 250 கோடியைத் தொட்டிருக்குமா என விஜய் ரசிகர்கள் இந்நேரம் கூகுள் செயது கொண்டிருப்பார்கள்.
ஆந்திரா, தெலுங்கானாவில் நேற்று முன்தினம் வெளியான இப்படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'அதிரிந்தி' படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்றும் நாளையும் அங்கு பல தியேட்டர்களில் 70 சதவீதம் வரை முன்பதிவிற்கான வரவேற்பு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.
25வது நாளான இன்று 250 கோடியைக் கடக்கிறதோ இல்லையோ நாளைக்குள் 250 கோடியைக் கடந்துவிடும் என்றும் சொல்கிறார்கள். விஜய் நடித்த படங்களிலேயே அதிக வசூலைப் பெற்றுள்ள படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள 'மெர்சல்' படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது.
அட்லீக்கு விஜய் மீண்டும் ஒரு படம் இயக்கும் வாய்ப்பைக் கொடுப்பார் என்பது மட்டும் உறுதி.