17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி |
தமிழ் சினிமாவில் ஒரு படத்தை எடுத்து முடித்து அதற்கு தணிக்கை சான்றிதழ் வாங்கி வெளியிடுவதற்குள் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து எந்த ஒரு கருத்தையும் பதிவிட முடியாத நிலையே உள்ளது. தமிழில் 'மெர்சல்' படத்தில் அனுமதிக்கப்பட்ட வசனங்கள், அதன் தெலுங்கு டப்பிங்கான 'அதிரிந்தி' படத்தில் அனுமதிக்கப்படவில்லை.
மசாலாப் படங்களுக்கு மத்தியில் மக்களின் பிரச்சனைகளைப் பற்றிச் சொல்லும் படமாக 'அறம்' படம் நேற்று வெளியானது. இப்படத்திற்கு சமூக வலைத்தளங்களில் பெரிய வரவேற்பு கிடைத்தாலும் தியேட்டர்களுக்குப் படம் பார்க்க வருபவர்கள் குறைவாகவே உள்ளார்கள். நல்ல படங்களை மக்கள் வரவேற்க வேண்டும் என பலர் கூறினாலும் 'அறம்' படம் இன்னும் மக்களை எட்டாமல்தான் உள்ளது. இருந்தாலும் படத்திற்கான விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக உள்ளதால் அடுத்த சில நாட்களில் வசூல் கூடவும் வாய்ப்புள்ளது.
'அறம்' படத்தில் பல வசனங்கள் ஆட்சி, அதிகார மையத்தை எதிர்ப்பதாகவே உள்ளது. அதற்குத் தியேட்டர்களில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்திற்கு இப்படி வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் மற்றுமொரு நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள படமான 'அருவி' படத்தின் டீசருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தின் நாயகி முன்னணி நடிகை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிதி பாலன் என்ற அறிமுக நடிகைதான் படத்தின் நாயகி. அருண் பிரபு புருஷோத்தமன் என்ற அறிமுக இயக்குனர்தான் படத்தை இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்ற குரல்களுக்கு மத்தியில் இது போன்ற மக்களின் பிரச்சனைகளை மையப்படுத்திய படங்கள் நாயகியரின் படங்களாக வருவது தமிழ் சினிமாவிற்கு நல்லது. ஹீரோக்களுக்குக் கொட்டிக் கொடுக்கப்படும் பல கோடி சம்பளம், நல்ல சினிமாவுக்கு, பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் சினிமாவுக்கு செலவழிக்கப்பட்டால் தமிழ் சினிமாவும் இனி உலக சினிமாவாக மாறும்.