டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அப்பாவைக் கொன்றவர்களை அவரது மகன் பழி வாங்கும் கதைகள் தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கில் வந்திருக்கிறது. அப்படிப்பட்ட படங்கள்தான் 'மூன்று முகம், அபூர்வ சகோதரர்கள்' ஆகிய படங்கள். இது போல இன்னும் பல படங்கள் உள்ளன. 'மூன்று முகம்' படத்தில் அப்பா ரஜினிகாந்த், நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பார். 'அபூர்வ சகோதரர்கள்' படத்திலும் அப்பா கமல்ஹாசன் நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருப்பார்.
1982ல் வந்த 'மூன்று முகம்' திரைப்படத்திற்கும், 1989ல் வந்த 'அபூர் சகோதரர்கள்' படத்திற்கும் இடையே கூட ஒரு வரிக் கதையாகப் பார்த்தால் ஒரு ஒற்றுமை உண்டு. போலீஸ் அதிகாரியான அப்பாவை வில்லன் கொன்றதால் அவருடைய மகன்கள் வில்லனைப் பழி வாங்குவதுதான் இரண்டு படங்களுக்கும் பொதுவான கதை.
'மெர்சல்' படம் வந்த போது அதை 'அபூர்வ சகோதரர்கள்' படத்தின் தழுவல் என்று சொன்னவர்கள்தான் அதிகம். யாரும் 'மூன்று முகம்' படத்தின் தழுவலும் அதில் இருக்கிறது என்று சொல்லவில்லை. ஆனால், இப்போது 'மெர்சல்' படத்தில் 'மூன்று முகம்' படத்தின் தழுவலும் இருக்கிறது என 'மூன்று முகம்' படத்தை ரீமேக் செய்ய உரிமை வாங்கி வைத்திருக்கும் தயாரிப்பாளர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளாராம். இதனால், அட்லீக்கு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாம்.
முன்னர் வந்த தமிழ்ப் படத்தைத் தழுவி படம் எடுத்திருக்கிறார் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள் சரி. அப்படியே ஹாலிவுட் படத்தைத் தழுவி படம் எடுத்தவர்களுக்கும், அடுத்தவர் கதையைத் திருடிப் படம் எடுத்தவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்புவார்களா ?.