ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ஹீரோக்களை தாண்டி ஹீரோயின்களுக்கு அவ்வளவாக இயக்குநர்கள் முக்கியத்துவம் தருவது இல்லை. இரண்டு டூயட், ஹீரோவுடன் கொஞ்சம் காட்சிகள், கொஞ்சம் கிளாமர் என்று தான் சினிமாவில் காலம் காலமாக விதிமுறை.
இந்த விதிமுறைகளை உடைத்தெறிந்து கதைகளை தன் பக்கம் திருப்பி வெற்றி கண்ட கதாநாயகிகள் வெகு சிலரே... அந்த வரிசையில் தற்போது நயன்தாரா இருக்கிறார்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் கதைப்பற்றியும், தன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் அறிந்தே நடிக்கிறார். கத்தி பட கதை என்னுடையது என்று கத்தி சொன்னாலும் இயக்குநர் கோபி நயினாரை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அடுத்த கதையை ரெடி பண்ணி நயனுக்கு கதை சொன்ன போது கதை கேட்ட கொஞ்ச நேரத்திலேயே அட்வான்ஸை கையில் திணித்து கதையை ஓகே பண்ணி, உங்களை இயக்குநர் ஆக்குவது என் பொறுப்பு என்று மற்ற வேலைகளை ஒரு உதவி இயக்குநரை போல் உதவியாக இருந்துள்ளார் நயன்தாரா.
அறம் படத்தை தன் மேனேஜர் ராஜூ மூலம் தானே தயாரித்தார் என்கின்ற ஒரு தகவலும் உண்டு. படத்தில் மதிவதனி என்ற கலெக்டர் கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்துகிறார் நயன். சமீபகாலமாக அதிகப்படியான கிளாமருக்கு நயன் இடம் கொடுக்கவில்லை, அதை இந்த படத்திலும் பார்க்க முடிகிறது.
படம் முழுக்க இரண்டு காட்டன் புடவை தான். காதில் சின்ன தோடு. இதைத்தவிர நயன்தாராவுக்கு எந்தவித ஆடை அலங்காரமும் இல்லாமல் படம் முழுக்க மிடுக்காக வலம் வருகிறார். சரி இனி அறம் கதைக்கு வருவோம்.
குடிநீருக்காக தோண்டப்பட்ட ஆழ்குழாய் கிணற்றுக்குள் ஒரு குழந்தை விழுந்து விடுகிறது. அந்த குழந்தையை உயிருடன் மீட்டார்களா, இல்லையா என்பது படத்தின் ஒரு வரிக் கதை. பத்திரிகைகளில் அன்றாடம் நாம் படித்து வரும் செய்தி தான் இது. ஆனால் இந்த ஒற்றை வரி கதையை எடுத்துக் கொண்டு, அரசையும் அதிகாரிகளையும் நயன்தாரா மூலம் வெளுத்து வாங்கி இருக்கிறார் இயக்குநர் கோபி.
"மக்களுக்கு இரண்டு முதலாளிகள். ஒருவர் அதிகாரி, மற்றொருவர் அரசியல்வாதி. அதிகாரிகள், அரசியல்வாதிகளை மீறி எதுவும் செய்ய முடியாது", "நிலாவில் கால் பதித்தது சரித்திரம் அல்ல... ஆழ்துளைகிணற்றில் இறங்குவதே சாதனை...", "நம்மள பார்த்தால் எந்த பெரிய மனுசனாவது பயப்படுறானா..." என பல வசனங்களை கலெக்டராக நயன்தாரா பேசி விட்டு, அந்த கவுன்சிலரை கைது செய்வேன் என்று கெத்து காட்டியிருக்கிறார்.
அந்த கிராமத்தில் நடக்கும் பல சம்பவங்களை படம் பார்க்கும் நம்மால் மக்களின் துயரங்களை உணர முடிகிறது.
விழுந்த குழந்தையை உயிருடன் மீட்டு எடுக்க ஒரு கலெக்டராக அத்தனை அரசியல் மிரட்டல்கள் சவால்களையும் சந்தித்து, இவ்வளவு இடையூறாக இருக்கும் கலெக்டர் வேலையை விட தயாராகும் நயன்தாரா, பதவியில் இருந்து தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதில்லை, மக்கள் தேவைகளுக்கு நான் என்று மதிவதனி வீறுநடை போடுவது அசத்தல்.
இந்தவாரம், சென்னையின் முக்கிய இடங்கள், திரையரங்குகள் என பல இடங்களில் ஹீரோக்கள் பிடித்த இடங்களில் இன்று நயன்தாராவின் தனி கட் அவுட் போஸ்டர்கள் என்று அறம் அதகளப்படுத்துகிறது. இன்னும் ஒரு ஐந்து வருடங்களாவது நயன்தாரா இந்த துறையில் தாக்கு பிடிப்பார் என்று தெரிகிறது.
இதேப்போன்று கதை தேர்வில் நயன்தாரா அதிகம் கவனம் செலுத்தி படங்களில் நடித்தார் என்றால் நிச்சயம் அவருக்கு சினிமாவில் இன்னும் பெரிய இடம் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதி.