தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில், ஜிவி பிரகாஷ் நடித்த புரூஸ்லீ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் கிர்த்தி கர்பந்தா, அதன்பின்னர் பாலிவுட் சென்றவருக்கு முதல்படமான "கெஸ்ட் இன் லண்டன்" தோல்வியை தந்தது. தற்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள உள்ள குடும்ப படம் "ஷாதி மெயின் ஜரூர் ஆனா". இப்படம் குடும்ப உறவுகளை பற்றி பேசுகிற படமாக வெளிவந்துள்ளது. இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் பற்றியும் நம்மோடு அவர் பகிர்ந்து கொண்டதாவது...
படத்தில் உங்க ரோல் பற்றி சொல்லுங்க?
ஆர்த்தி சுக்லா என்ற ரோலில் நடித்துள்ளேன். நல்ல அறிவான பெண். பாரம்பரியத்தை விரும்புபவர். இல்லற வாழ்வும் அப்படி தான் அமைய வேண்டும் என்று எண்ணுபவர். கார், பங்களா போன்றவற்றை எல்லாம் விரும்பாதவர், தனக்கு வரப்போகிற கணவன், அன்பாக இருக்க வேண்டும் என்று எண்ணும் சாதார பொண்ணு.
"ஷாதி மெயின் ஜரூர் ஆனா" கதை என்ன?
ஆர்த்தி மற்றும் சத்தேந்ரா குடும்பத்திற்கு இடையே நடக்கும் உறவு சம்பந்தப்பட்ட கதை. இந்தியாவில் திருமணம் செய்வது சுலபம், ஆனால் அதை சரியாக நடத்தி வாழ்வது என்பது கஷ்டம். அப்படி திருமணத்திற்கு முன்னரும், பின்னரும் நடக்கும் பிரச்னைகளை பற்றி பேசுகிற படம் இது.
பத்ரிநாத் துல்கன்யா படமும், இதுவும் ஒரே படமா?
நிச்சயம் அப்படியில்லை. சிலர் அப்படி தவறாக நினைக்கிறார்கள். பத்ரிநாத் துல்கன்யா படத்திற்கும், எங்களது படத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. மேலும் பத்ரிநாத் படம் வெளிவந்த பின்னர் தான் நாங்கள் எங்களது படத்தை ஆரம்பித்தோம். அப்படி இருக்கையில் ஒரே கதையில் படமாக வாய்ப்பில்லை. பத்ரிநாத் படம் போன்று எங்களது படமும் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தால் மகிழ்ச்சி அடைவேன்.
உங்கள் வாழ்க்கையில் திருமணத்தில் முக்கியமான விஷயம் என்ன?
அப்படியெல்லாம் எதுவும் இல்லை. இரண்டு பேரும் நேர்மையாக இருக்க வேண்டும், அப்படி ஒரு உறவை தான் நான் எதிர்பார்க்கிறேன். என் பெற்றோருக்கு திருமணமாகி 28 ஆண்டுகளாகிவிட்டது. இன்றும் அவர்கள் ஒற்றுமையுடன் நல்லபடியாக வாழ்கிறார்கள். அப்படியொரு வாழ்க்கையை விரும்புகிறேன்.
இன்றைக்கு சமூகத்தில் விவாகரத்து அதிகமாகி வருகிறது, இதுபற்றி உங்கள் கருத்து?
அதற்கு முக்கிய காரணம், தங்களது வாழ்க்கையை அவர்கள் சீரியஸாக எடுத்து கொள்கிறார்கள். முன்பெல்லாம் பெண்கள் தங்களது பிரச்னைகளை அவ்வளவாக வெளிகாட்டியது கிடையாது, எல்லாவற்றையும் அவர்கள் தாங்கி கொண்டார்கள். ஆனால் இன்றைக்கு பெண்கள் தைரியமாக பேச தொடங்கி உள்ளனர். பெற்றோர்களும் அவர்களுக்கு உதவியாக உள்ளனர். ஆகையால் பிடிக்கவில்லை என்றால் சுலபமாக விவாகரத்து கேட்டு பிரிவது அதிகமாகிவிட்டது. என்னை பொறுத்தமட்டில் கணவன் - மனைவி இடையேயான உறவு சரியில்லை என்றால் அவர்கள் பிரிவது தான் நல்லது.
நடிகையாகவில்லை என்றால் என்னவாகி இருப்பீர்கள்?
நான் நடிக்க வரவில்லை என்றால் நிச்சயம் குடும்ப தலைவியாகி இருப்பேன். நான் 15 வயதை கடந்த போது நீங்கள் என்னவாக வேண்டும் என்று கேட்டார்கள், அப்போது நான் திருமணம் செய்ய வேண்டும் என்று தான் சொன்னேன். என் கேரியரை பற்றி ஒருபோதும் நான் கவலைப்பட்டது கிடையாது. இன்றைக்கு நான் சினிமா நடிகை இல்லை என்றால், இப்போது திருமணமாகி இரண்டு, மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாகி இருப்பேன் என்று புன்னகைத்தபடி விடைபெற்றார் கிர்த்தி.