பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள இயக்குனர் எம்.ஏ.நிஷாத் தற்போது 'கிணர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். குடிதண்ணீர் பிரச்சனையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்தப்படம் தமிழில் 'கேணி' என்கிற பெயரிலும் வெளியாக இருக்கிறது. இதில் பசுபதி, பார்த்திபன், நாசர், ரேவதி, அர்ச்சனா, அனுஹாசன் மற்றும் ஜெயப்ரதா என தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் நடிக்கின்றனர்.
இது சின்ன பட்ஜெட் படம் என்றாலும், தனது பிஸியான ஷெட்யூலில் இதில் ஜெயப்ரதா நடிக்க ஒப்புக்கொண்டதுக்கு படத்தின் தயாரிப்பாளர் தான் காரணமாம். ஆம்.. மலையாளத்தில் மோகன்லால்-ஜெயப்ரதா நடிப்பில் உருவான 'பிரணயம்' படத்தை தயாரித்தவர் மீண்டும் ஆறு வருடங்களுக்குப்பின் தயாரிக்கும் படம் என்பதால் ஜெயப்பிரதா உடனே ஒப்புக்கொண்டாராம்.