ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பர்பி படத்துக்கு பின், பாலிவுட்டில் மிகவும் பிசியான நடிகையாகி விட்டார், இலியானா. நடிப்பதை தவிர, சத்தமில்லாமல், பல சமூக பணிகளிலும் ஆர்வமாக செயல்படுகிறார். மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்களை, அதிலிருந்து மீட்பது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்படுகிறார்.
'சில மாதங்களுக்கு முன், எனக்கும் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது. அதிலிருந்து எப்படி மீள்வது என்றே தெரியவில்லை. ஒரு கட்டத்தில், தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட யோசித்தேன். அப்போது தான், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிலரது உதவி கிடைத்தது; அதற்கு பின் தான், என் மனநிலை மாறியது' என்கிறார், இலியானா.
'உங்கள் அழகு, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே எப்படி?' என, கேட்டபோது, 'வீட்டை விட்டு வெளியில், ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டுமானால், அதற்கு முன், இரண்டு மணி நேரம், 'மேக் அப்' போடுவேன்; அதனால், நான், அழகாக தெரிந்திருக்கலாம்' என, சிரிக்கிறார், இலியானா.