பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் ப்ரியன் மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். இவருக்கு வயது 55.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ப்ரியன், சின்ன வயதிலேயே சினிமாவின் மீது ஆசை கொண்டு ஒளிப்பதிவாளரானவர். ஆரம்பத்தில் பாலுமகேந்திராவிடம் பல படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர், பின்னர் தொட்டாச்சிணுங்கி படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து பொற்காலம், தேசிய கொடி, தெனாலி போன்ற பல படங்களுக்கும், கமல், விஜய், அஜித், சூர்யா, விஷால், சிம்பு என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இயக்குநர் ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ப்ரியன் தான். ஹரி இயக்கிய முதல் படமான "தமிழ்" முதல் தற்போது இயக்கி வரும் "சாமி 2" வரை அனைத்து படங்களுக்கும் ப்ரியன் தான் ஒளிப்பதிவாளர். இடையில் "வேங்கை" படத்திற்கு மட்டும் ப்ரியன் ஒளிப்பதிவு செய்யவில்லை.
சென்னை, கேகே.நகரில் வசித்து வந்த ப்ரியன், வளசரவாக்கத்தில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இதற்கான வாசல் கதவு அமைக்கும் நிகழ்வு இன்று(நவ., 9) நடந்தது. இதை முடித்து விட்டு வீடு திரும்பியவர், நெஞ்சுவலிப்பதாக கூறியுள்ளார். அப்படியே மாரடைப்பு ஏற்பட வீட்டிலேயே அவரது உயிர் பிரிந்தது.
ப்ரியனின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அவரது சொந்த ஊரான விருதுநகரில் நாளை(நவ., 10) இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.