ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் பிரபல நடிகரான சஞ்சய் தத், சிறைவாசம் சென்று வந்த பின்னர், அவரது நடிப்பில் வெளியான முதல்படம் பூமி. ஓமங் குமார் இயக்கியிருந்தார். தனது ரீ-என்ட்ரி படம் சூப்பர் ஹிட்டாக இருக்க வேண்டும் என்று எண்ணினார், ஆனால் படம் தோல்வி அடைந்தது. இதனால் தனது அடுத்தப்படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு உள்ளார். தற்போது சில படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் பூமியை தொடர்ந்து ஓமங்குமார் இயக்கும் மற்றொரு படமான "தி குட் மகாராஜா" படத்தில் நடிக்க இருந்தார் சஞ்சய். ஆனால் பூமி பட தோல்வி காரணமாக சஞ்சய், மீண்டும், ஓமங் உடன் பணியாற்ற விரும்பாமல் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வேறு ஒரு நடிகரை தேடி வருகிறாராம் ஓமங் குமார்.