பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சினிமாத்துறைக்கு சம்மந்தமே இல்லாதவர்கள் எல்லாம் திரைப்படங்களின் வசூல் விவரங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். தங்களை சினிமா டிரேடிங் அனலிஸ்ட் என்று சொல்லிக் கொண்டு திரையுலகில் ஊடுருவியுள்ள ஒரு கும்பல் தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தவறான வசூல் விவரங்களை வெளியிடுகின்றனர்.
தோல்வியடைந்த படங்களைக் கூட 100 கோடி வசூல் செய்துவிட்டதாக, 200 கோடி வசூல் செய்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பொய்ப்பிரச்சாரம் செய்வது சமீபகாலமாக அதிகரித்துவிட்டது. இதனால் பல தயாரிப்பாளர்கள் அதிருப்தியடைந்து வருகின்றனர்.
இது குறித்து தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக உள்ள நடிகர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய கசப்பை வெளியிட்டுள்ளார். “உண்மையை சொல்லப்போனால், ஒரு படத்தின் தயாரிப்பாளருக்குக் கூட உடனடியாக தனது படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது தெரியாது. வசூலாகி அதில் இருந்து வரியைக் கழித்து, விநியோகஸ்தர்கள் - திரையரங்கு உரிமையாளர்களுக்கு பங்குத் தொகை கழித்தது போக, தயாரிப்பாளருக்கு பணம் கிடைக்கும்.
தயாரிப்பாளர்கள் போடும் முதலீட்டில் பாதி பணம் வசூலானாலே பெரிய விஷயம். பல திரையரங்குகள் படத்தின் வசூலை தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களுக்குக் கொடுக்காமல் இழுத்தடிப்பதும், வருடக்கணக்கில் பாக்கி வைத்துவிடுவதும் வழக்கத்தில் உள்ளது. நான் தயாரித்த பல படங்களுக்கு கடந்த ஆண்டு வரை பணம் பாக்கியிருந்தது.
உண்மை இப்படி இருக்க, சில தயாரிப்பாளர்கள் தங்களுடைய படம் இவ்வளவு வசூல் ஆனது' என்று பொய்யாகப் போட்டுக் கொள்வதில் சந்தோஷமடைகிறார்கள்.
அதைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ள மட்டுமே முடியும். படத் தயாரிப்பாளருக்கு மட்டுமே உண்மையான வலி தெரியும். இந்த உண்மையை உணராமல் சிலர் தங்களின் இஷ்டப்படி டுவிட்டரில் வசூல் விவரங்களை வெளியிடுவது காமெடியாக இருக்கிறது.”
இவ்வாறு உதயநிதி கூறினார்.