இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற படம் 'மரகதநாணயம்'. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மரகத நாயணம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. அதற்கு முன்னதாக தனது இரண்டாவது படமாக வேறு ஒரு கதையை இயக்க முடிவு செய்துள்ளார் ஏ.ஆர்.கே.சரவணன்.
இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் என்ன தெரியுமா? இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவிருக்கிறார். விஜய்சேதுபதியை வைத்து கருப்பன் படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக ஒரு தகவல் உண்டு. கருப்பன் படத்தை அடுத்து மீண்டும் விஜய்சேதுபதியை வைத்து படம் தயாரிப்பதாகவும் திரையுலகில் பேச்சு அடிபட்டது.
இந்நிலையில் தான் ஏ.ஆர்.கே.சரவணனுக்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார் ஏ.எம்.ரத்னம். இவர் இயக்கும் படத்தின் ஹீரோ யார் என்பது உட்பட இப்படம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் இப்போது நடந்து வருகிறது. பேச்சு வார்த்தைகள் முடிவடைந்ததும் விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.