தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவின் பழமையான நிறுவனம் ஏவிஎம். ஏவி.மெய்யப்ப செட்டியார் ஆரம்பித்து வைத்த இந்நிறுவனம், பின்னர் அவரது மகன் சரவணன், பேரன் குகன்... என வளர்ந்தது.
ஏவிஎம் சரவணனின் பேத்தியும், எம்.எஸ்.குகனின் மகளுமான அபர்ணாவுக்கும், தயாரிப்பாளர் ரகுநந்தனின் மகன் ஷியாம் என்ற மையத்ரேயாவுக்கும் இன்று(நவ., 8) ஏவிஎம்., ராஜேஸ்வரி திருமண மஹாலில் சிறப்பான முறையில் திருமணம் நடந்தது. முன்னதாக இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் நடிகர் ரஜினி, கவிஞர் வைரமுத்து, இயக்குநர் எஸ்பி.முத்துராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்று மணக்களை வாழ்த்தினார்.
மைத்ரேயா, லண்டனில் எம்பிஏ., படித்தவர். இவரது இயற் பெயரான ஷியாம் என்பதை மைத்ரேயா என்று மாற்றியவர் இயக்குநர் மிஷ்கின் தான். விரைவில் மிஷ்கின் தான் இயக்கும் புதிய படத்தில் மைத்ரேயா ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.