அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
மும்பையைச் சேர்ந்தவர் அனுயா. கிளாஸ் டீச்சர் என்ற இந்திப் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர், தமிழில் சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், நண்பன், நான் உள்பட சில படங்களில் நடித்தார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் அனுயா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆரம்பகட்ட நிலையிலேயே வெளியேறினார்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் பாடகி சுசித்ரா தனது டுவிட்டரில் நடிகர், நடிகைகளின் ஆபாச படங்களை வெளியிட்டார். அதில் அனுயா படங்களும் வெளியாகி இருந்தது. அதன் பிறகு அதனை சுசித்ராவின் கணவர் கார்திக் குமார், சுசித்ரா பெயரில் யாரோ செய்த வேலை என்று மறுத்தார். என்றாலும் அந்த படங்கள் இப்போதும் சுசிலீக்ஸ் என்ற பெயரில் இணையதளத்தில் பரவி வருகிறது.
இந்த நிலையில் அனுயா நேற்று மும்பை சைபர் கிரைம் போலீசில் தனது வழக்கறிஞர் மூலம் ஒரு புகார் அளித்துள்ளார். "மார்பிங் செய்யப்பட்ட எனது படங்களை இணைய தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு எனது மதிப்பை குறைத்து வருகிறார்கள். இதனால் எனக்கு பட வாய்ப்புகள் குறைந்து வருகிறது. சமூகத்தில் மரியாதை இழக்கும் சூழ்நிலை இருக்கிறது. இதனால் அந்த படங்களை நீக்குவதோடு. அதனை வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகார் மனுவில் கூறியிருக்கிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.