மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தீபாவளியன்று வெளியான 'மெர்சல்' திரைப்படம் இன்றுடன் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை முடிக்கிறது. இந்த 20 நாட்களில் சுமார் 240 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன . தமிழ்நாட்டில் 'எந்திரன்' படத்தின் வசூலைக் கடந்த 'மெர்சல்' படம் வெளிநாடுகளிலும் சாதனை வசூலை படைத்து அதிக வசூலைப் பெற்ற தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
தமிழில் வெளியாகும் அன்றே இப்படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'அதிரிந்தி' படம் வெளியாக வேண்டியது. ஆனால், தணிக்கை வாங்க வேண்டியதில் காலதாமதம் ஏற்பட்டதால் பட வெளியீட்டைத் தள்ளி வைத்துவிட்டார்கள். கடந்த வாரம்தான் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்தது. அதன் பின் நவம்பர் 9ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்தார்கள்.
ஆந்திரா, தெலுங்கானாவில் சுமார் 400 தியேட்டர்கள் வரை இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கில் எத்தனை கோடி வசூலாகிறது என்பதைப் பொறுத்து இந்தப் படம் 'பாகுபலி 2' அல்லாத தென்னிந்திய படங்களின் வசூலில் சாதனை படைக்கவும் வாய்ப்புள்ளது. சுமார் 50 கோடி வசூலித்தாலே 300 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிடும். தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களையும் கவருமா என்பது நாளை தெரிந்துவிடும்.