ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் 400 கோடி ரூபாய் தயாரிப்பான '2.0' படம் 2018ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், '2.0' படத்தில் நடித்து வரும் அக்ஷய்குமார் ஹிந்தியில் தயாரித்து, நாயகனாக நடித்து வரும் 'பேட் மேன்' படம் 2018, ஜனவரி 26ம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து '2.0' படம் ஏப்ரல் மாதம் தள்ளிப் போகும் என தகவல்கள் பரவின. ஆனால், '2.0' படத் தயாரிப்பு தரப்பில் படம் திட்டமிட்டபடி ஜனவரி மாதம் வெளியாகும் என்றார்கள். சமீபத்திய பேட்டி ஒன்றில் அக்ஷய் குமார் மீண்டும் குழப்பியுள்ளார். அவரிடம் ஒரே சமயத்தில் உங்களது இரண்டு படங்களும் வெளியாகுமா என்று கேட்டதற்கு, ஏதாவது ஒரு படம்தான் வெளியாகும் என்று பதிலளித்திருக்கிறார்.
“பேட் மேன்' படம் நான் தயாரித்திருக்கும் படம். '2.0' படம் லைக்கா தயாரித்திருக்கும் படம். குடியரசு தினத்தை முன்னிட்டு என்னுடைய ஒரு படம் தான் வெளியாகும். இரண்டு படங்களும் ஒரே சமயத்தில் போட்டி போடாது. ஒன்று 'பேட்மேன்' வெளியாகும் இல்லையென்றால் '2.0' வெளியாகும். அவர்கள் வெளியிட்டால் என்னுடைய 'பேட் மேன்' படம் தள்ளிப் போகும், அவர்கள் வெளியிடவில்லை என்றால் என்னுடைய 'பேட் மேன்' படம் வெளியாகும்,” எனத் தெளிவாகக் குழப்பியிருக்கிறார்.
அக்ஷய் குமார் இவ்வளவு குழப்புவதைப் பார்த்தால் '2.0' படம் திட்டமிட்டபடி வெளியாக வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.