ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
ரஜினி, அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், லைகா தயாரிப்பில் பிரமாண்டமாய் உருவாகி உள்ள படம் 2.O. படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணி நடந்து வருகிறது. இப்படம் 2018-ம் ஆண்டு ஜன., 26-ம் தேதி ரிலீஸாக உள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸாக உள்ளது. அன்றைய தினம் தான் அக்ஷ்ய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள பேடுமேன் படமும் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 2.O படங்களின் வெளியீட்டில் குழப்பம் ஏற்பட்டது.
இந்த குழப்பத்திற்கு அக்ஷ்ய் குமார் இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பேடுமேன் - 2.O மோதல் குறித்து அக்ஷ்ய் கூறியிருப்பதாவது... "பேடுமேன் படத்தை நான் தயாரித்துள்ளேன். குடியரசு தினத்தில் எனது படம் ரிலீஸாகிறது. அன்றைய தினம் தான் 2.O படமும் ரிலீஸாகிறது. 2.O ரிலீஸானால் நிச்சயம் என் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டேன், ஒருவேளை அந்தப்படம் ரிலீஸாகவில்லை என்றால் நான் எனது படத்தை ரிலீஸ் செய்வேன்" என்று கூறியிருக்கிறார்.