தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
கேரளாவில் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த 'குஞ்சாலி மரைக்கார்' என்கிற கடற்படை தலைவன் பற்றிய கதை படமாக இருப்பதும் ஆனால் அந்த கேரக்டரில் வெவ்வேறு இயக்குனர்களின் டைரக்சனில் மம்முட்டி, மோகன்லால் இருவரும் தனித்தனி படங்களில் நடிக்க இருப்பதாகவும் வெளியான தகவல் தான் இப்போது மலையாள சினிமாவின் ஹாட் டாபிக்.
மம்முட்டி நடிக்கும் 'குஞ்சாலி மரைக்கார்' படத்தை தயாரித்து இயக்குவதாக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். ஏப்ரல் 2018ல் படம் துவங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதேசமயம், மோகன்லால் நடிக்கும் 'குஞ்சாலி மரைக்கார்' படத்தை இயக்க இருக்கும் பிரியதர்ஷன், போட்டி போட்டுக்கொண்டு தான் இந்தப்படத்தை இயக்கப்போவதில்லை என்றும், இன்னும் எட்டு மாதங்களில் மம்முட்டி படம் துவங்காவிட்டால், மோகன்லாலை வைத்து 'குஞ்சாலி மரைக்கார்' படத்தை தான் ஆரம்பிப்பது உறுதி என்றும் கூறியுள்ளார்.