அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தற்போது 30 வயதை கடந்து விட்ட காஜல் அகர்வால், தமிழில் விவேகம், மெர்சல் படங்களில் நடித்தது போன்று தெலுங்கில் கைதி எண் 150, நேனே ராஜூ நேனே மந்திரி படங்களிலும் நடித்தார். இந்த படங்கள் எல்லாமே வெற்றியாக அமைந்தது. இந்த நிலையில், சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பதற்கு அவர் அதிகப்படியான சம்பளம் கேட்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதாவது, தெலுங்கில் காஜல் அகர்வாலை லஷ்மி கல்யாணம் படத்தில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் தேஜா. அதையடுத்து ராணாவை வைத்து அவர் இயக்கிய நேனே ராஜூ நேனே மந்திரி படத்திலும் காஜலை நடிக்க வைத்தார். இந்த நிலையில், அடுத்தபடியாக வெங்க டேஷை வைத்து ஒரு படம் இயக்குகிறார் தேஜா.
இந்த படத்தில் நடிக்க காஜல் அகர்வாலை அணுகியபோது, தனது வழக்கமான சம்பளத்தில் இருந்து கூடுதலாக கேட்டாராம். அதோடு, சிரஞ்சீவியுடன் கைதி எண் 150 படத்தில் நடித்தபோது கூடுதலான சம்பளம் கொடுத்தார்கள். அதேபோல் சீனியர் நடிகரான வெங்கடேஷ் படத்தில் நடிப்பதற்கும் அதேபோன்று சம்பளம் தந்தால் தான் நடிப்பேன் என்று டிமான்ட் செய்து வருகிறாராம். தன்னை தெலுங்கு சினிமாவில் அறிமுகம் செய்த இயக்குனரிடமே காஜல் அகர்வால் இப்படி பிடிவாதம் செய்து வருவது தெலுங்கு சினிமாவில் அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.