தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் அறம். தண்ணீர் பிரச்சினையை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள இந்த படம் வருகிற 10-ந் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு 7 மணி அளவில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது இயக்குனர் கோபிநயினார், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் உள்பட சிலர் கலந்து கொண்டனர். நயன்தாரா பங்கேற்கவில்லை.
கோபி நயினார் பேசுகையில், அறம் படத்தின் கதையை நான் பலரிடம் சொன்னேன். ஆனால் அவர்கள் இந்த கதையைக்கேட்டு விட்டு குறும் படத்திற்கான கதைபோல் உள்ளது. கமர்சியல் படத்திற்கான எந்த விசயங்களும் இல்லை என்று நிராகரித்தார்கள். அப்போதுதான் செளந்தர் என்பவர் மூலம் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல சென்றேன். அவரிடம் சொல்லி முடித்ததும் ஒரு அறை மணி நேரம் வெயிட் பண்ண சொன்னார்கள். அப்போது அங்கே நயன்தாரா வந்தார்.
அப்போது வரைக்கும் அது நயன்தாராவின் அலுவலகம் என்று கூட எனக்கு தெரியாது. சினிமா கம்பெனிக்கு அவர் வந்திருக்கிறார் என்று தான் நினைத்தேன். அவர் பத்து நிமிடம் கதையை கேட்டதுமே நான் நடிக்கிறேன் என்று சொன்னார். எனக்கு எனது கதை மீது முதல் நம்பிக்கை அங்குதான் வந்தது. அதன்பிறகு கேமராமேன் ஓம் பிரகாசிடம் சொன்னபோது, அவரும் வித்தியாசமாக இருப்பதாக சொன்னார். அப்படி ஒவ்வொருவராக நம்பிக்கை கொடுத்தனர்.
பின்னர் படப்பிடிப்புக்கு சென்றபோது அதிக ஈடுபாடு காட்டி நடித்தார் நயன்தாரா. கேரவனை விட்டு இறங்கி வருபவர், தனக்கான காட்சி இல்லாதபோதும் மற்றவர்கள் நடிப்பதை ஸ்பாட்டில் நின்றபடியே கவனித்தார். உதவி இயக்குனர் வேலைகளையும் செய்தார். இந்த படத்தில் அரசியல், சமூக பிரச்சனை எல்லாம் உள்ளது. மக்களுக்கு தேவையான ஒரு படம் இது.
இப்போதுவரை நயன்தாரா எனக்கு நம்பிக்கை கொடுத்து வருகிறார். இந்த படம் வெற்றி பெற்று நீங்கள் அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்கிறார். அந்த அளவுக்கு நான் பெரிய இயக்குனராக வேண்டும் என்ற நயன்தாரா நினைக்கிறார். இந்த அறம் மக்களுக்கான படம் என்பதால், மீடியாக்கள் தான் மக்களிடம் கொண்டு இதை சேர்க்க வேண்டும். அப்படி நீங்கள் செய்தால் இந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றியடையும்.
இந்த அறம் படத்தை இயக்குவதற்கு முன்பு, தாகபூமி குறும்பட விவகாரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் பத்திரிகைகள் தான். நீங்கள் தான் எனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தீர்கள். அதனால் தான் எனக்கு அறம் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போதும் நான் ஒரு இயக்குனராக சினிமாவில் நிலைப்பதும், பத்திரிகைகள் கையில் தான் உள்ளது. நீங்கள் நினைத்தால் நயன்தாரா சொன்னது போன்று நான் அடுத்த லெவலுக்கு சென்று விடுவேன். அதனால் அறம் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.