விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
தமிழ்த் திரையுலகத்தில் 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக மற்ற நடிகர்களைக் காட்டிலும் பல வகைகளிலும் பல துறைகளிலும் தனித்து விளங்குபவர் கமல்ஹாசன். அவருடைய படங்கள் ஒவ்வொன்றும் எதிர்கால சினிமா துறையினருக்கு ஒரு பாடமாக இருக்கும்.
பல சிறந்த படங்களை அவர் கொடுத்திருந்தாலும் சில படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் அவர் மீது உண்டு. இருப்பினும் அந்தப் படங்கள் பின்னாளில் விமர்சன ரீதியாக பெரிய பாராட்டுக்களைப் பெற்றதும் ஒரு வரலாறு.
எத்தனை எத்தனையோ பல புதிய விஷயங்களை தமிழ்த் திரையுலகத்திற்குள் கொண்டு வந்தவர் கமல்ஹாசன். ஆவிட் படத் தொகுப்பு, டிஜிட்டல் ஒளிப்பதிவு தொழில்நுட்பம், ஆரோ டிஜிட்டல் ஒலி என பலவற்றைச் சொல்லலாம். சினிமாத் துறையைப் பொறுத்தவரை அவரை ஒரு பல்கலைக்கழகம் என்று பாராட்டுபவர்கள் அதிகம்.
தமிழில் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் தனித் தடம் பதித்தவர். காதல் படங்களில் நடித்து காதல் இளவரசன் என்று பட்டம் வாங்கியவர், பின்னல் உலக அளவிலான படங்களை எடுத்து இப்போது உலக நாயகன் என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
கடந்த சில மாதங்களாகவே, அவருடைய டுவிட்டர் கணக்கில் அரசியல் சார்ந்த, சமூக நலம் சார்ந்த பல கருத்துக்களைத் தைரியமாகப் பதிவிட்டு வருகிறார். அதற்காக பல எதிர்ப்புகளையும், கடுமையான கண்டனங்களையும் சம்பாதித்து வருகிறார். அதே சமயம் டுவிட்டரில் மட்டுமே கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்காமல், எண்ணூர் துறைமுக கழிமுகப் பகுதிக்கு நேரடியாகச் சென்று மக்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்தார்.
கமல்ஹாசன் ஒரு வாய் சொல் வீரர்தான் என பலரும் கமெண்ட் அடித்துக் கொண்டிருக்க, தான் ஒரு செயல் வீரரும் கூட என எண்ணூர் களத்தில் கமெண்ட் அடித்தவர்களை 'கப்-சிப்' ஆக்க வைத்தார்.
இன்று அவருடைய 63வது பிறந்த நாள். வழக்கம் போல பல நற்பணிகளை காலையிலேயே ஆரம்பித்து வைத்துவிட்டார். சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிறபகுதி மக்கள் மழையால் தத்தளித்துக் கொண்டிருக்க, பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை என அறிவித்துவிட்டார்.
அதே சமயம், நேற்றே “வரலாற்று சிறப்பு வாய்ந்த அறிவிப்புக்கு உங்களை அழைக்கிறோம்,” என பத்திரிகைகளுக்கு அழைப்பு அனுப்பியுள்ளார்.
இன்று காலை 11.30 மணி அளவில் அந்த அறிவிப்பை வெளியிட உள்ளார் கமல்ஹாசன். அந்த அறிவிப்பு அவர் ஆரம்பிக்கப் போகும் அரசியல் கட்சியாக இருக்குமா என தமிழ்நாடே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.