ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
ஒரே நேரத்தில் ஒரே கதையை இரண்டு பேர் ஒரே காலகட்டத்தில் படமாக்குவது ஆச்சர்யமான நிகழ்வுதான். மலையாள சினிமாவிலும் முதன்முறையாக அப்படி ஒரு நிகழ்வு நடக்க இருக்கிறது. சில தினங்களுக்கு முன் மம்முட்டி நடிக்க, 'குஞ்சாலி மரைக்காயர்-IV' என்கிற வீரரின் கதையை படமாக இயக்கப்போவதாக அறிவித்தார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.
ஏற்கனவே மோகன்லால் இந்தக்கதையில் நடிப்பதாகவும் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கப்போவதாகவும் பேசப்பட்டு வந்தது. இப்போது மம்முட்டி நடிப்பதால், மோகன்லால் படம் கைவிடப்படுமோ என்கிற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் மோகன்லால், மம்முட்டி இருவரும் தனித்தனியாக நடிக்க 'குஞ்சாலி மரைக்காயர்' கதை தனித்தனி படங்களாக உருவாக இருக்கிறதாம்.