பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தமிழ்த் திரையுலகத்தில் இதுவரை எந்த படமும் செய்யாத பல சாதனைகளை 'மெர்சல்' படம் முறியடித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 'எந்திரன்' பட வசூலை முறியடித்தது. வெளிநாடுகளில் பல நாடுகளில் முதல் முறையாக அதிக வசூலைப் பெற்ற தமிழ்ப் படம் என்ற சாதனையை ஏற்கெனவே படைத்துள்ளது. இரண்டு வாரங்களைக் கடந்த பிறகும் நேற்றும், நேற்று முன் தினமும் பல தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியிருக்கிறது.
'மெர்சல்' திரைப்படம் 12 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை ஏற்கெனவே கடந்திருக்கிறது. படம் வெளிவந்து 18 நாட்கள் ஆகிவிட்டது. தற்போது வசூல் 250 கோடி ரூபாயை நெருங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் சில நாட்களில் அந்த சாதனையையும் கடந்துவிடும். அதற்குப் பின் இருக்கும் மிகப் பெரிய சாதனை 'எந்திரன்' படத்தின் மொத்த வசூல். 'எந்திரன்' படத்தின் மொத்த வசூலாக சுமார் 280 கோடி தமிழ்த் திரையுலகத்தின் முதல் சாதனையாக உள்ளது. தமிழ்நாட்டில் 'எந்திரன்' சாதனையை முறியடித்தது போல மொத்த வசூலிலும் 'மெர்சல்' படம் முதலிடத்தைப் பிடிக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
அப்படி ஒரு சாதனையை 'மெர்சல்' படத்தால் ஏற்படுத்தவும் முடியும். வரும் 9ம் தேதி தெலுங்கில் 'அதிரிந்தி' ஆக 'மெர்சல்' படம் வெளியாக உள்ளது. ஏற்கெனவே ஜிஎஸ்டி விவகாரத்தால் படத்திற்கு மிகப் பெரிய விளம்பரம் கிடைத்துள்ளது. அது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் எதிரொலித்துள்ளது. 'அதிரிந்தி' தெலுங்கில் வெற்றி பெற்று சுமார் 50 கோடி வசூலித்தால் இப்படம் 300 கோடி வசூல் சாதனையைப் படைக்கவும் வாய்ப்புள்ளது.