அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி மற்றும் பலர் நடிக்கும் 'இப்படை வெல்லும்' படம் வரும் 9ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் புரொமோஷனுக்காக பாஜக தலைவர்களான எச்.ராஜா, தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோரைப் பேச வைக்க உள்ளேன் என உதயநிதி ஸ்டாலின் சொன்னதாக செய்திகள் வெளியாகின. உதயநிதி ஸ்டாலினின் இந்தக் கருத்துக்கு எச்.ராஜா சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.
அவருடைய டுவிட்டரில், “ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம்,” என மொத்த படத்தையும் ஒரே டுவீட்டில் காலி செய்து விட்டார் எச்.ராஜா. இதற்கு படத்தின் இயக்குனர் கௌரவ் நாராயணன், “எங்க மொத்த டீமும் உங்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கு, கலக்குங்க சார், கைவிட்டுடாதீங்க,” என எச்.ராஜாவுக்கு பதிலளித்திருக்கிறார். தன்னுடைய படத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்தி படத்தை ஓட வைக்க முயலும் கௌரவ் நாராயணனின் செயல் 'இப்படை வெல்லும்' தயாரிப்பு நிறுவனமான லைக்காவை கோபப்படுத்தியுள்ளதாம்.
'2.0' என்ற 400 கோடி ரூபாய் செலவுப் படம் ஒன்றை எடுத்து வருகிறது லைக்கா நிறுவம் என்பது குறிப்பிடத்தக்கது. 'இப்படை வெல்லும்' இயக்குனர் கௌரவ் நாராயணனை ஆரவக் கோளாறான டிவீட்டுகள் எதையும் போட வேண்டாம் என தயாரிப்பு நிறுவனம் கடுமையைக் காட்டியுள்ளதாம்.