தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் கமல்ஹாசன், அரசியலில் களமிறங்க இருக்கிறார். அதன்வெளிப்பாடாக சமூக சார்ந்த பிரச்னைகளை கையிலெடுத்து அதை வெளிப்படுத்தி வருவதோடு, மத்திய, மாநில அரசுகளையும் விமர்சித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் இந்து தீவிரவாதம் பற்றி அவர் பேசிய கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுள்ளது. குறிப்பாக இந்துவா அமைப்புகள் கடுமையான வார்த்தைகளை சொல்லி திட்டி வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ.,வை சேர்ந்தவரும், நடிகரும், இயக்குநருமான விசு, கமல் குறித்து அவரது பாணியில் ஒரு அறிக்கை வெளியிட்டு வெளுத்து வாங்கியிருக்கிறார். அதன் விபரம் வருமாறு...
ஹலோ கமல்ஜீ ..நீங்க நடிச்ச சிம்லா ஸ்பெஷலுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதின விசு நான்.. பெரிய அரசியல்வாதி ஆயிடுவீங்க வாழ்த்துக்கள். இந்து, மதமும் இந்துக்களும் வடிவேலுவோட பாஷைல சொல்லப் போனா எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க-ங்கறதைப் புரிந்து கொண்டு, அவர்களை சீண்டி விட்டா, யாராவது எங்கேயாவது எகிறுவான், அவனை வச்சு பாலிடிக்ஸ் பண்ணலாம்னு யாரோ ஒரு குள்ள நரி உங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கு.
இந்து மதம் தீவிரவாதிகள் இல்லாத மதம் இல்லைன்னு சொல்ல முடியாது-ன்னு நீங்க எதையோ வழக்கம் போல தலைய சுத்தி வளைச்சு மூக்கைத் தொடப்போக, யாரோ ஒருத்தன் எங்கேயோ மூளைல உங்களைத் தூக்கில போடணும் னு கதறப் போக, அரசியல்ல போணி ஆனவன் ஆகாதவன், அரசியலில் விளங்கினவன், விளங்காம போனவன், அரசியல்ல கொடிகட்டி பறக்கறவன், கொடியை ஆடுமாடு மேய விட்டவன் எல்லாரும், நான், நீன்னு போட்டி போட்டுக்கிட்டு டிவி முன்னாடி வந்து வரிசைல நிக்கறாங்க.
அவங்கவங்க மேதா விலாசத்தைக் காட்ட. ஊடகத்துக்கு அடுத்த 15 நாளைக்குத் தீனி கிடைச்சாச்சு. அடுத்தது இருக்கவே இருக்கு பாயின்ட்ஸ் நான் எடுத்துத் தரேன். பார்ப்பனன்.. ஆரியக்கூட்டம்.. கைபர்/போலன் கணவாய்.. ஆப்கானிஸ்தான்ல ஆடு, மாடு மேச்ச கூட்டம்.... இப்படி ஒவ்வொண்ணா எடுத்து விடுங்க, பிச்சுக் கிட்டு போகும்.
பாவம் உங்களுக்கும் வீட்டுல பொழுது போக வேணாமா, யாருமே இல்லை. தனிக்கட்டை, வயசும் ஆயாச்சு. ஆமாம் உங்களுக்கு BJP மேல அப்படி என்ன சார் கோவம்? சென்சார் போர்டில உங்களுக்கு வேண்டாதவங்களை அதிகாரி ஆக்கினாங்களே அதெல்லாம் இருக்காது அவர் இதுக்கெல்லாம் மேல பாத்தவர்ன்னு நான் சொல்லிட்டேன்.
அது இருக்கட்டும் சார் ஒழுங்கா வரி கட்டறீங்களாமே... அப்படியா? சூப்பர்... புககுல காட்டற வரவுக்குத் தானே? அதாவது 100 ரூபாய் வரும்படின்னா, அதை 40 ரூபாய்ன்னு புக்குல காட்டி, அந்த 40 ரூபாய்க்கு ஒழுங்கா வரி கட்டறீங்க அதானே.. அப்ப மீதி 60 ரூபாய் கருப்பு தானே.
புரியும்படியாக சொல்லுங்க நான் ஒரு ஞானசூனியம், ஒரு யோசனை பையில ஒரு மைக் வச்சுக்குங்க, நாளைக்கே நெய்வேலி போங்க, பழுப்பு நிலக்கரி சுரங்கத்து மேல ஏறி நின்னு சும்மா சுத்தி வேடிக்கை பாருங்க, கூட்டம் கூடும் அது போதும். அதுக்குப் பேரு தான் பப்ளிசிட்டி ஸ்டன்ட். உனக்கென்ன மேலே நின்றாய் ஓ கமலஹாசா ன்னு பாட்டு எங்கேயோ கேக்குது.. ஜமாய்ங்க...!
இவ்வாறு விசு கூறியுள்ளார்.