ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மைனா படத்தின் மூலம் உச்சத்திற்கு போன நடிகை அமலாபால், தொடர்ந்து தெய்வத்திருமகள், வேட்டை என்று ஹிட் படங்களை கொடுத்ததோடு, அடுத்தடுத்த பட வேட்டைக்கும் தயாராகி வருகிறார். வரும் காதலர் தினத்தன்று சித்தார்த்துடன் நடித்த காதலில் சொதப்புவது எப்படி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் பார்வதி என்ற கல்லூரி மாணவி கேரக்டரில் நடித்துள்ளார். அடுத்து அதர்வாவுடன் நடித்த முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் 17ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த இரண்டு படங்களுக்கு பிறகு வேறு எந்த படத்திலேயும் அமலா பால் கமிட் ஆகவில்லையாம். ஏன் என்று கேட்டால் படம் ரிலீஸ்க்கு பிறகு சொல்கிறேன் என்று தன்னிடம் கதை கூற வருபவர்களிடம் கதையை மட்டும் கேட்டு வைத்துள்ளாராம். இதுபற்றி சிலரிடம் விசாரித்த போது, மிக குறைந்த காலத்திலேயே பெரும் வெற்றியையும், கை நிறைய காசையும் பார்த்தவர் அமலா பால். எனவே இனி ரிலீஸ் ஆக இருக்கும் படங்களின் வெற்றியை பொறுத்து தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தும் முடிவில் அவர் இருக்கலாம் என்கிறார்கள்.
ஒரு பக்கம் உச்ச நடிகை என்று பெயர் எடுத்து வைத்திருந்தாலும், அம்மணியும் கிசுகிசுவில் சிக்காமல் இல்லை. டைரக்டர் விஜய்யுடன் காதல் என்று ஒருபக்கம் மீடியாவில் பரபரப்பாக செய்திகள் வந்தாலும், அதை எல்லாம் உதறி தள்ளிவிட்டு எப்பவும் போல ஹாயாக கோடம்பாக்கத்தில் உலாவி வருகிறார் இந்த மைனா. அப்படியே சென்னையில் தங்க சொந்தமாக வீடும் பார்க்கிறாராம் அமலாபால். ஏற்கனவே கேரளாவில் பல கோடி மதிப்பில் வீடு வாங்கி போட்டு இருக்கும் இந்த மைனாவிடம் கல்யாணத்தை பற்றி மட்டும் கேட்டால் இன்னும் இரண்டு மூன்று வருஷமாகும், அதுவரைக்கும் சினிமா... சினிமா... சினிமா... மட்டும் தான் என்கிறார்.
ஆக மொத்தத்தில் அமலா பாலின் வேட்டை தொடர்கிறது...!