ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கொடி என்ற ஒரே படத்தில் நடித்தவர், அதன்பிறகு தெலுங்கு சினிமாவிற்கு சென்றார். அங்கு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருபவர் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வருவேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அனுபமா, நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...
பிரேமம் படம் எனக்கு மிகப்பெரிய ஓப்பனிங் தந்தது. பொது இடங்களில் என்னை பார்த்தால் அந்த சுருட்டை தலைமுடி பொண்ணு என்று தான் அடையாளம் சொல்வார்கள். அந்த படத்திற்கு பிறகு தலைமுடியின் ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்டேன். இதே ஸ்டைலை எல்லா படத்திலும் நான் காட்ட முடியாததால் இப்போது வேறு வேறு ஹேர் ஸ்டைலுக்கு மாறி வருகிறேன்.
கொடி படத்திற்கு பிறகு தமிழில் சில கதைகள் வந்தன. ஆனால் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். குறிப்பாக சவாலான வேடங்கள் கிடைத்தால் நடிக்க தயாராக உள்ளேன். தற்போது தெலுங்கில் நானியுடன் ஒரு படம் மற்றும் இன்னொரு புதிய படத்தில் நடிக்கிறேன். ஜர்னலிசம் படிக்க வேண்டும் என்பது என் ஆசை, அதற்காக கல்லூரியில் சேர்ந்து படித்தேன். ஆனால் நடிப்பிற்கு வந்துவிட்டதால் படிப்பை தொடர முடியவில்லை. இப்போது தொலைதூர கல்வி மூலம் நடிக்கிறேன்.
நயன்தாராவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரின் கதைத்தேர்வு வித்தியாசமாக இருக்கும். அவரைப்போன்று கதை தேர்வு செய்து விஜய், சூர்யா, அஜித் ஆகியோருடன் டூயட் பாடும் ஆசை உள்ளது.
தமிழ் சினிமாவில் நிறைய நல்ல நல்ல படங்கள் பண்ண வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்காக சென்னை வந்து கதை விவாதத்தில் பங்கேற்று வருகிறேன். விரைவில் புதிய தமிழ் படத்துடன் உங்களை சந்திக்கிறேன் என்று விடை பெற்றார் அனுபமா.