தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பல படங்களில் நடித்தும் ஹீரோவாக க்ளிக்காமால் இருந்தார் எஸ்.ஜே.சூர்யா. அவர் நடித்த படங்களில் அவரது நடிப்புத்திறமை வெளிப்பட்டிருந்தாலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த 'இறைவி' படத்தில்தான் எஸ்.ஜே.சூர்யாவுக்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தது.
இறைவி படம் படு தோல்வியடைந்தாலும், நடிகராக அப்படம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பெரிய 'பிரேக்'காக அமைந்தது. இறைவி படத்தைத் தொடர்ந்து ஸ்பைடர், மெர்சல் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர், விரைவில் வெளியாக உள்ள நெஞ்சம் மறப்பதில்லை, இறவாக்கலாம் படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
பல படங்களில் நடித்துக் கொண்டு தற்போது பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா, மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் ஒரு படத்தில் இணைகிறார். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை வேறு ஒருவர் இயக்குகிறார்.
இந்தப்படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாபி சிம்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தனக்கு சினிமாவில் லைஃப் கொடுத்தவர் என்பதை மறந்து கார்த்திக் சுப்பாரஜிடம் பெரிய சம்பளம் கேட்டாராம் பாபிசிம்ஹா. எனவே, இப்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க 'டிமான்டி காலனி' படத்தில் நடித்த சனந்த் என்பவரை புக் பண்ணியுள்ளனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், பிரபுதேவா நடிக்கும் 'மெர்குரி' படத்திலும் சனந்த் நடித்திருக்கிறார்.