தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட், ஹாலிவுட் என இரண்டிலும் கலக்கி வருகிறவர் பிரியங்கா சோப்ரா. போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் சக்தி மிக்க பெண்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ராவுக்கு 91-வது இடம் கிடைத்துள்ளது. சொத்து மதிப்பு, சமூகத்தில் மதிப்பு, தான் சார்ந்திருக்கும் தொழில் செய்த சாதனை அடிப்படையில் உருவான பட்டியல் இது.
பிரியங்கா சோப்ராவுடன், ஐசிஐசிஐ தலைமை செயல் அதிகாரி சாந்தா கோச்சர், ஹெச்சிசிஎல் கார்பரேஷன் தலைமை செயல் அதிகாரி ரோஷினி நாடார், பெப்சிகோ நிறுவன தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
உலகின் சக்திவாய்ந்த பெண்மணியாக ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் தொடர்ந்து 12-வது ஆண்டாக தேர்வாகியுள்ளார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே 2-வது இடத்திலும், பேஸ்புக் சி.ஓ.ஓ. ஷெர்ல் சான்ட்பெர்க் 4-வது இடத்திலும், ஜி.இ. நிறுவனத்தின் சி.இ.ஓ. மேரி பாரா 5-வது இடத்திலும் உள்ளனர்.