'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரெட்டைச்சுழி படத்தில் அறிமுகமான ஆரி, அதன் பிறகு நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது மௌனவலை என்ற படத்தில் நடிக்கிறார். இது சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். இதில் ஆரி ஜோடியாக ஸ்மிருதி நடிக்கிறார். இவர்கள் தவிர மதுசூதனன், ஹரிஷ்பேடி, அருள்ஜோதி, உபாசனா உள்பட பலர் நடிக்கிறார்கள். எஸ்.ராஜசேகர் தயாரிக்கிறார், பாருக்பாஷா ஒளிப்பதிவு செய்கிறார், ஜாவித் ரியாஸ் இசை அமைக்கிறார். களம் படத்தை இயக்கிய ராபர்ட் இயக்குகிறார்.
படம் பற்றி ஆரி கூறியதாவது: மாயா படத்திற்கு பிறகு நான் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். மற்ற படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும். துடிப்பான ஒரு இளைஞன் வாழ்க்கையில் வேலை, காதல் என்று சந்தோஷமாக இருக்கிறான். ஆனால் அவனை அறியாமலேயே அவனைச்சுற்றி ஒரு வலை பின்னப்படுகிறது. அந்த வலை முற்றிலும் அவனை சுற்றியபிறகுதான் அவனுக்கு விஷயமே தெரிய வருகிறது. அதிலிருந்து அவன் எப்படி வெளியே வருகிறான் என்பதுதான் படத்தின் கதை. என்கிறார் ஆரி.