தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சென்னை : தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முழுக்க கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாகின.
மழைநீரை வெளியேற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதோடு தமிழக காவல் துறையும் பல இடங்களில் மீட்புப்பணிக்காக களமிறங்யுள்ளனர். அப்படி போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு சேவை செய்யும் ஒரு போட்டோவை டுவிட்டரில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் கமல்.
அவர் தனது டுவிட்டர் பதிவில், காவல் துறை பணிகளுக்கு இடையே, நிவாரண பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு நன்றி. சீருடை அணிந்தாலும், அணியாவிட்டாலும் அவர்கள் சிறந்த குடிமகன்களாக ஒளிருகின்றனர். இதேப்போன்று தமிழர்களும் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மற்றொரு டுவீட்டில், இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்யும் போது அரசுப் பணியாளர்களுக்கு இடையூறோ, கேலியோ செய்யாமல் உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை என்று பதவிட்டிருக்கிறார்.