தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நாளைய தீர்ப்பு படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஜய், மெர்சல் படம் வரை 61 படங்களில் நடித்து விட்டார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படமும் இதற்கு முன்பு முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி படங்களைப்போன்று சமூக நோக்கமுள்ள ஒரு அதிரடியான கதையில் தயாராகிறது.
இதுவரை மீடியாக்களுக்கு அளித்த எந்தவொரு பேட்டியிலும் நடிக்க வருவதற்கு முன்பு இயக்குனர் ஆக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டதாக விஜய் சொன்னதில்லை. ஆனால் தற்போது ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன் அளித்துள்ள ஒரு பேட்டியில், நடிப்பை விட இயக்குனர் ஆக வேண்டும் என்பது தான் விஜய்யின் கனவாக இருந்ததாக கூறியுள்ளார்.
இந்த தகவலை விஜய் நடித்த பிரியமுடன் படத்திற்கு தான் ஒளிப்பதிவு செய்தபோது அவர் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார் விஜய்மில்டன்.
ஆக, விஜய்க்குள்ளும் ஒரு இயக்குனர் இருக்கிற சமாச்சாரம் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அந்த இயக்குனரை, விஜய் எப்போது வெளியில் எடுத்து விடுவாரோ தெரியவில்லை.