ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2016ம் ஆண்டு வெளிவந்த 'ஜில் ஜங் ஜக்' படத்திற்கு எந்தப் பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தார் சித்தார்த். வேறு வழியில்லாமல் மீண்டும் சொந்தப் படத் தயாரிப்பில் இறங்கினார். மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த காலத்தில் அவருடைய நண்பராக இருந்த மற்றொரு உதவி இயக்குனர் மிலின்ட் இயக்கத்தில் 'அவள்' என்ற படத்தை ஆரம்பித்தார்.
இந்தப் படத்தை ஒரே சமயத்தில் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் எடுத்ததாகச் சொல்கிறார்கள். தற்போது இப்படி சொல்வது பேஷன் ஆகிவிட்டது. எந்த ஒரு மொழியில் மட்டும் நேரடியாக எடுத்திருக்கிறார்கள் என்று படத்தைப் பார்த்தால்தான் தெரியும்.
தமிழில் 'அவள்' என்ற பெயரில் இன்று வெளியாகும் இந்தப் படம், ஹிந்தியில் தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்' என்ற பெயரில் வெளியாகிறது. தெலுங்கில் 'குருஹம்' என்ற பெயரில் இன்று வெளியாவதாக இருந்த இந்தப் படம் சரியான தியேட்டர்கள் கிடைக்காததால் நவம்பர் 10ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சித்தார்த் நடித்த தெலுங்குப் படம் வெளியாகி சுமார் நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. அவரை ஏறக்குறைய தெலுங்குத் திரையுலகில் ஒதுக்கி வைத்துவிட்டனர். இன்று ஒரே சமயத்தில் தெலுங்கிலும் ரீ-என்ட்ரி கொடுக்கலாம் என்று சித்தார்த் ஆசைப்பட்டிருந்தார், அதுவும் நடக்க முடியாமல் போய்விட்டது.