தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நான் நலமாக உள்ளேன், என்னைப்பற்றிய வதந்திகளை தவிர்க்கவும் என பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா கேட்டு கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் எவர்கிரீன் பாடகி பி.சுசீலா. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பி.சுசீலா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு இந்திய மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்திருக்கிறார். இந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடியதற்காக கின்னஸ் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றிலும் இடம்பிடித்துள்ளார்.
தற்போது 80 வயதை கடந்த பி.சுசீலா அமெரிக்காவில் உள்ளார். நேற்று இரவு முதல் இவர் இறந்துவிட்டதாக தவறான வதந்தி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றனது. ஆனால் இதை மறுத்துள்ளார் சுசீலா.
இதுகுறித்து சுசீலா, அமெரிக்காவிலிருந்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது... நேயர்களுக்கு வணக்கம். என்னைபற்றி நிறைய வதந்திகள் வருகிறது. நான் அமெரிக்கா வந்துள்ளேன், நாளை இந்தியா வந்துவிடுவேன். என்னைப்பற்றி ஏதேதோ சொல்கிறார்கள், அதை நம்பாதீர்கள், நான் நலமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதுப்பற்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெளியீட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது... சுசீலாவை பற்றி தவறான செய்தி வருகிறது. ஏன் இப்படி தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்று அவர் என்னிடம் வேதனைப்பட்டார், இதற்கு என்ன காரணம் சொல்ல, சிலருக்கு இதே வேலையாக போய்விட்டது. தயவு செய்து உங்களை கேட்பவர்களையும், கேட்காதவர்களையும் அந்த சங்கீத சரஸ்வதி ஆரோக்கியமாக இருப்பதை சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.