600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய படத்தை திட்டமிட்டு படமாக்காமல், சகட்டுமேனிக்கு படமாக்கிவிட்டு கடைசியில் எடிட்டிங்கில் திணறிப்போகிறார்கள் இயக்குநர்கள். சிம்புவை வைத்து ஏஏஏ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அந்தப் படத்தை இயக்கும்போதே இரண்டு பாகங்களாக வெளியிடப்போவதாக அறிவித்தார். ஆனால், ஏஏஏ படம் படு தோல்வியடைந்ததால் ஏஏஏ-2 படம் ட்ராப்பானது.
அதேபோல் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் வேலைக்காரன் படம் பைனல் புட்டேஜ் நாலரை மணி நேரப்படமாக இருப்பதால் குழப்பம் நிலவுகிறது. இதன் காரணமாக அப்படத்தின் எடிட்டர் மாற்றப்பட்டிருக்கிறார். இதேபோல் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது.
துருவ நட்சத்திரம் படத்தை உருவாக்கி வரும் இயக்குநர் கௌதம் மேனன் அப்படத்தை எடிட் செய்து பார்த்தபோது இரண்டரை மணி நேரத்தில் கதையைச் சொல்ல முடியாது என்பது தெரிந்து புதிய முடிவை எடுத்திருக்கிறார். அதாவது, துருவ நட்சத்திரம் படத்தை பாகுபலி பாணியில் தொடர்ச்சியாக 3 பாகங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
துருவ நட்சத்திரம் படத்தின் முதல் பாகத்தில் இப்படத்தின் வில்லன் யார் என்ற கேள்வியோடு முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.