தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பசங்க கிஷோர், புதுமுகம் மேக்னா நடித்துள்ள படம் உறுதிகொள். இதனை அய்யனார் இயக்கி உள்ளார். இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் வன்முறை அதிகமாக இருப்பதாக கூறி தணிக்கை சான்றிதழ் தர மறுத்து விட்டனர். இதனால் தயாரிப்பாளர் படத்தை மறு தணிக்கைக்கு (ரிவைசிங் கமிட்டி) அனுப்பினார். அவர்கள் படத்தை பார்த்து விட்டு சில கட்கள் கொடுத்து யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதுபற்றி படத்தின் இயக்குனர் அய்யனார் கூறியதாவது:
ஒரு நல்ல நோக்கத்தை அடிப்படையாக கொண்டு படத்தை உருவாக்கி உள்ளோம். எங்கள் திட்டப்படி கடந்த மாதம் 6ந் தேதியே படத்தை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமா இருப்பதாக கூறி சான்றிதழ் தர மறுத்து விட்டனர். இதனால் அப்போது வெளியிட முடியவில்லை. பிறகு நாங்கள் ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை கொண்டு சென்றோம். அங்கு படத்தை பார்த்தார்கள்.
அவர்களுடன் நாங்கள் விவாதம் செய்தோம். ஒவ்வொரு காட்சிக்குமான காரணத்தைச் சொன்னோம். அதை ஏற்றுக் கொண்டு இரண்டு ஷாட்களுக்கு கட் கொடுத்தார்கள். ஒரு ஆடியோவை மியூட் பண்ணச் சொன்னார்கள். அதற்கு ஒப்புக் கொண்டோம் யுஏ சான்றிதழ் கொடுத்தார்கள். படம் நாளை வெளிவருகிறது என்றார்.