டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு |
தொழிலாளர் சம்பள பிரச்னையில் ஒரு சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், பெப்சி தொழிலாளர்கள் இன்று(05.02.12) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சினிமா தொழிலாளர்கள் சம்பள பிரச்னை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதனால் 10நாட்களுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் தமிழ் சினிமாவே முடங்கி போய் உள்ளது.
இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, பெப்சி தொழிலாளர்கள் தங்களது சென்னை, வடபழனியில் உள்ள இசையமைப்பாளர் சங்க அலுவலகத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகின்றனர். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை வரை நடக்கிறது. இதில் பெப்சி சங்கத்தில் உள்ள 23 தொழிலாளர்கள் சங்கமும் கலந்து கொண்டுள்ளது. பெப்சி தலைவர் சிவா தலைமையில் நடந்து வரும் இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.