'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
சில வருடங்களுக்கு முன் மெகாஸ்டார் சிரஞ்சீவியை பற்றி டன் கணக்கில் குற்றம் சாட்டியவர் தான் 'இதுதாண்டா போலீஸ்' ராஜசேகர். இப்போது காலம் சற்று உருண்டோடிய நிலையில் சிரஞ்சீவி வீட்டிற்கே சென்று அவரை சந்தித்துள்ளார் என்றால், அதிசயம் அல்லாமல் வேறென்ன..? இந்த திடீர் விசிட்டுக்கு காரணம் இல்லாமல் இல்லை.
ராஜசேகர் நடிப்பில் உருவாகியுள்ள 'பிஎஸ்வி கருட வேகா' என்கிற படம் வரும் வெள்ளியன்று ரிலீஸாக இருக்கிறது. அந்தப்படத்தை பார்ப்பதற்கு சிரஞ்சீவியை அழைப்பதற்காக தனது மனைவி ஜீவிதாவுடன் சென்று வந்துள்ளார் ராஜசேகர். ஆனால் சிலரோ இது தனது படத்தை ஓடவைப்பதற்காக ராஜசேகர் செய்யும் பப்ளிசிட்டி என்கிறார்கள்.