ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை அமலா பால் மீது கடந்த சில நாட்களாக புதிய கார் வாங்கியதில் அவர் தவறான முகவரியைக் கொடுத்து சட்டத்தை மீறி வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு வெளியானது. அவரைத் தொடர்ந்து மலையாள நடிகர் பகத் பாசிலும் தவறான முகவரி கொடுத்து அவரும் சட்டத்தை மீறியுள்ளார் என்று செய்திகள் வெளியானது.
இருவரும் கேரளாவில் வாகனத்தைப் பதிவு செய்யாமல் பாண்டிச்சேரி முகவரியைக் கொடுத்து பதிவு செய்ததால் கேரள மாநில அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரித் தொகை கிடைக்காமல் போனதாக குற்றம் எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கு நடிகை அமலா பால் இதுவரை எந்த ஒரு பதிலையும் தெரிவிக்காமல் இருந்தார். சற்று முன் அவருடைய இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதில், “சட்டத்தை மீறும் எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை, எனது நலன் விரும்பிகளிடம் இரண்டு முறை விசாரித்துவிட்டேன்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், “நகர வாழ்க்கையிலிருந்தும், தேவையில்லாத யூகங்களிலிருந்தும், ஓட வேண்டும் என சில நேரங்களில் நினைப்பதுண்டு,” என்றும் கூறியிருக்கிறார்.