ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சினிமா தொழிலாளர்கள் சம்பள பிரச்னை தொடர்பாக பெப்சிக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மோதலை தீர்க்க இயக்குநர் சங்கம் சார்பில் தனியாக ஒரு குழு அமைக்கப்படும் என்று இயக்குநர் சங்க தலைவர் பாரதிராஜா அறிவித்துள்ளார். தொழிலாளர்கள் சம்பள பிரச்னை தொடர்பாக பெப்சிக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், 100க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. படப்பிடிப்பு ரத்தால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெப்சி சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக இயக்குநர்கள் சங்கம் சார்பில் சிறப்பு கூட்டம் சென்னையில் நடந்தது. இயக்குநர்கள் சங்க தலைவர் பாரதிராஜா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்த பாரதிராஜா, தொழிலாளர்கள் சம்பள பிரச்னை தொடர்பாக, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். இந்த குழு பெப்சியுடனும், தயாரிப்பாளர்கள் சங்கத்துடனும் தனித்தனியாகவும், கூட்டாகவும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான நல்ல முடிவுகளை உருவாக்க வழிவகை செய்யும் என்றார்.
இந்த கூட்டத்தில் செயலாளர் அமீர், பொருளாளர் ஜனநாதன் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.